வயதானவர்களை கண்டுபிடிக்க புதிய சாஃப்ட்வேர்… இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சோதனை முயற்சி.!

கிரிக்கெட் வீரர்களின் வயதை கணக்கிட போன் எக்ஸ்பர்ட் எனும் புதிய மென்பொருளை சோதனை முயற்சியாக பிசிசிஐ கொண்டுவர உள்ளது.    இந்திய கிரிக்கெட் வாரியத்தால்  கிரிக்கெட் வீரர்களின் வயதை கண்டறிய முன்னர் TW3 முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர்களின் உண்மையான வயது கண்டறியப்படும். ஆனால், இந்த முறையில் ஒருமுறை பரிசோதனை செய்ய செலவு மட்டும் 2400 ரூபாய் ஆகும். மேலும் இதன் பரிசோதனை முடிவ வெளியே வர இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும். இதனை … Read more

சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் கிரிக்கெட் பயிற்சியாளர் வாசு காலமானார்!

மும்பையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான வாசு பரஞ்சபே இன்று மும்பையில் காலமானார். மும்பையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான 82 வயதான வாசு பரஞ்சபே இன்று மும்பையில் காலமானார். அவர் 1956 முதல் 1970 வரை பரோடா மற்றும் மும்பை அணிக்காக 29 முதல்தர போட்டிகளில் விளையாடி உள்ளார். ஓய்வுக்குப் பிறகு பரஞ்சபே, சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சார்கர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் … Read more

வீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிற்குள்ளே இருப்பது மிக கடினமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறினார். கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த தளர்வு, விளையாட்டு துறைக்கு அளிக்கப்படாத நிலையில், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி … Read more

கோபப்படாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் – மனம் திறந்த தோனி..!

கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கேப்டன் ஆக இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஐசிசி போட்டிகளின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி மட்டும் தான். இவரை  “கேப்டன் கூல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். காரணம் இவர் போட்டியின் போது  மைதானத்தில் வைத்து வீரர்கள் மீது கோவப்படுவதில்லை. இவர் இந்த வருடம் நடந்து முடிந்த உலககோப்பைக்கு பின் எந்த வித தொடரிலும் விளையாட வில்லை. உலகக்கோப்பைக்கு பின் … Read more

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட முகமது அசாரூதீன் !

ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதீன் சங்க தலைவர் பதவிக்கு கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் முகமது அசாரூதீன் 147 ஓட்டுகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தார். இதன்பின் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய பீல்டிங் பயிற்சிளாராக ! – ஜான்டி ரோட்ஸ்

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விணணப்பிக்கலாம் என்ற தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதற்கு வருகின்ற 30ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார். உலகின் மிகச்சிறந்த பீல்டர்களில் ஒருவராக விளங்கும்  ஜான்டி … Read more

சற்றுமுன் : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிப்பு..!

உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 17,18 நடக்கவிருந்த தேர்வு குழு கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. மும்பையில் இன்று எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து இந்திய அணியை தேர்வு செய்தனர். இந்த மூன்று வகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது.இதில் மிகவும் எதிர்பார்க்கப்பாட்ட தல எம்.எஸ் தோனி ஒரு … Read more

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள்,டி-20 தொடர் மேற்கிந்திய தீவு அணி அறிவிப்பு…!

கிங்ஸ்டன்: 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 என மூன்று விதமான போட்டி களை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 21-ஆம் தேதி அன்றும்,3 போட்டி களைக் கொண்ட டி-20 தொடர் நவம்பர் 4-ஆம் தேதி அன்றும் தொடங்குகிறது.இந்த இரண்டு தொடருக்கான விண்டீஸ் கிரிக்கெட் அணி திங்களன்று அறிவிக்கப்பட்டது. வீரர்கள் விவரம்:  ஒருநாள்: ஜேசன் ஹோல்டர் … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியின் காரணமாக விசாரணை நடுத்துகிறது பிசிசிஐ

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய  அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.இதனால், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இந்த தோல்வி குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது .மூத்த கிரிக்கெட் வீரர்கள் இந்த படுதோல்வி குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ,ஷங்கர் இந்திய அணியில் தேர்வு – கோலி , தோனி ஓய்வு

இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியைபிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தோனி, கோலி , பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அணி விளையாடவுள்ளது.இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழு : ஷிகர் தவான், ராகுல், … Read more