அந்த விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பண்ட்.! கலாச்சாரத்தை மதிக்க வலியுறுத்தல்.!

இந்திய குடிமகனாக நாம் நமது கலாச்சார அடையாளத்தை நாம் மதிக்க வேண்டும். – ட்ரீம் 11-இல் ரிஷப் பண்ட் விளம்பரம் குறித்து இசைக்கலைஞர்கள் எதிர்ப்பு.   இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அண்மையில் ட்ரீம் 11 எனும் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில், அவர் கிளாசிக் இசை பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பர். இந்த காட்சியமைப்புக்கு இசை கலைஞர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக இசை கலைஞர்களான கௌஷிகி சக்ரவர்த்தி மற்றும் புர்பயன் சட்டர்ஜி ஆகியோர்  … Read more

இத்தனை போட்டோ எடுத்து என்ன செய்வீங்க.? ஏர்போர்ட்டில் கடுப்பான ரோஹித் ஷர்மா.!

ஏர்போர்ட்டில் புகைப்படங்கள் எடுத்த புகைப்பட கலைஞர்களை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா எதற்காக இத்தனை புகைப்படங்கள் எடுக்குறீங்க என கேட்டுள்ளார்.  நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் 3 ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இன்று விமானம் மூலம் வங்கதேசம் புறப்பட்டனர். அப்போது ஏர்போர்ட்டில் கேப்டன் ரோஹித் சர்மாவை பலரும் புகைப்படம் எடுத்தனர். அப்போது … Read more

எடுத்துக்கோ – வேகப்பந்து வீச்சாளர்களுக்காக கோலி , ரோகித் தியாகம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரின் விமான பயணத்தில் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு  கோலி, ரோஹித்,டிராவிட் ஆகியோர் விட்டுக்கொடுத்துள்ளனர். நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளும்,நாளை மறுநாள்  நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக அடிலெய்டு நகருக்கு செல்லும் விமான பயணத்தில் வேகவந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு தேவை  என்ற காரணத்திற்காக,  கால்களை நீட்டி அமரும் … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா டி-20 தொடர் இன்று தொடக்கம் கோலியின் மீது எகிறும் எதிர்பார்ப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கிடையான முதல் இருபது ஓவர் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடை பெற இருக்கிறது. மொகாலியில் இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டிக்க்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்கவிருக்கும் இந்நிலையில், நடப்பு டி-20 சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நம்பர் 1 டி-20 அணியான இந்தியா ஆகிய இரு அணிகளும் … Read more

உலகக்கோப்பை போட்டிக்கான புது ஜெர்சி யை அறிமுகபடுத்தியது பிசிசிஐ

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியை முன்னிட்டு, இந்திய அணி தனது புதிய ஜெர்சி யை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை போட்டி என்றாலே உற்சாகம் அனல் பறக்கும், அதிலும் டி-20 உலகக்கோப்பை என்றால், சொல்லவா வேண்டும். அதிரடி சாகசம், எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டிகள், பரபரப்பின் உச்சம் என்று நம்மை குதூகலப்படுத்த வருகிறது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் இந்த இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான புதிய ஜெர்சி யை இந்திய அணி அறிமுகப்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்ற … Read more

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிமுகம்.! A+ ரக நடுவர்கள்… முழு சம்பள விவரம் இதோ…

பிசிசிஐ, புதியதாக A+ பிரிவு நடுவர்களை அறிமுக படுத்தியுள்ளது. அதர்க்கடுத்து, நடுவர்களை A,B,C என வகைப்படுத்தி அவர்களுக்கான சம்பளத்தையும் முறைப்படுத்தியுள்ளது.  இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்களுக்கு முதன்மை பிரிவு A, முதன்மை முக்கிய பிரிவு A+ , B என வகைப்படுத்துவது போல நடுவர்களையும் வகை படுத்தியுள்ள்ளது. அதில் புதியதாக A+ நடிகர்கள் என புதிய பிரிவை ஆரம்பித்து உள்ளது. இந்த A+ பிரிவில் 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் … Read more

#Breaking:கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக,டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடிய … Read more

மாட்டிறைச்சி & பன்றிக்கறிக்கு தடை.!? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்.!?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உன்ன கூடாதாம். ஹலால் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமாம். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. அரையிறுதி வாய்ப்புக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர், தற்போது, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான டி20 … Read more

BigBreaking:இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

திருமதி சுலக்ஷனா நாயக் மற்றும் திரு ஆர்பி சிங் ஆகியோர் அடங்கிய குழு இன்று நடத்திய ஆலோசனைக்  கூட்டத்தில் இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக  திரு ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தொடரில் இருந்து பொறுப்பேற்பார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா மீது இங்கிலாந்து அணி வீரர்கள் கோபம் – ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேற விருப்பம்!

மான்செஸ்டரில் நடைபெற இருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஐபிஎல்-லிருந்து இங்கிலாந்து வீரர்கள் வெளியேற விரும்புவதாக தகவல். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் 5வது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் … Read more