அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.! 22 பேர் உயிரிழப்பு.! 

US Gun Shoot 22 died

அமெரிக்காவில், மைனே மாகாணத்தில், லூயிஸ்டன் நகரத்தில் நேற்று (புதன்) இரவு வணிகவளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். லூயிஸ்டன் நகர வணிக வளாகத்தில் உள்ள பார், உணவகம், சூப்பர் மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து அந்த மர்ம நபர் நவீன ரக துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டுள்ளான்.  சம்பவம் நடத்திய மர்ம நபர் இன்னும் கிடைக்கவில்லை என்றும், … Read more

ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்திய பாதுகாப்பு படை. ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில்சோதனையின்போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டுள்ளனர். இதன்பின் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் லாரியில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், லாரியில் இருந்து 7 ஏகே47 ரக துப்பாக்கிகள், 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

வீட்டருகே துப்பாக்கி குண்டு விழுந்ததால் பரபரப்பு!

துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷபா என்பவரது வீடு வாசலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பார்க்கிங்கில் சாப்பிட்ட இளைஞர் மீது துப்பாக்கி சூடு.! போலீசார் அதிரடி பணி நீக்கம்!

மெக்டொனால்டு வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த இளைஞர் மீது போலீஸ் துப்பாக்கிசூடு. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டுக்கு சென்ற இளைஞர் வாகன நிறுத்துமிடத்தில் சாப்பிடும் போது போலீஸ்காரரால் சுடப்பட்டார். McDonald-ல் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் காரில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 17 வயது இளைஞனை புதிய போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். 17 வயது இளைஞர் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த காரைப் பார்த்ததும் பேக்அப் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். காரின் டிரைவரின் பக்கமாக நடந்து … Read more

#BREAKING: பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாகியால் சுட்டு காவலர் தற்கொலை. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காவலர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

#Breaking:பரபரப்பு…வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு!

சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு அருகில் உள்ள வீட்டில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது,வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு … Read more

#Breaking:குண்டு பாய்ந்து சிறுவன் மரணம் – அறிக்கை தாக்கல்

புதுக்கோட்டை:துப்பாக்கிக்குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பான கோட்டாட்சியாரின் விசாரணை அறிக்கை,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து,சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு  புதுக்கோட்டை அரசு … Read more

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலி..!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அங்குள்ள லேக்லேண்டில் இருக்கும் இரண்டு வீடுகளில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் கைக்குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமியை மீண்டும் பலமுறை சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையுடன் நடைபெற்ற மோதலில் ஒருவர், … Read more

ஆப்கானில் தலிபான்கள் துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல். ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில், ஆப்கான் நாட்டு தேசிய கொடியை கையில் எடுத்து மக்கள் கொண்டாடியதால் தலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறப்படுகிறது. Taliban soldiers did fire to disperse the crowds in Jalalabad … Read more

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டு கொலை…!

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் … Read more