மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 4 பச்சிளம் குழந்தைகள் பலி!

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்புப் பிரிவில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இது குறித்து கூறியுள்ள … Read more

மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு …!

தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 24 வயதுடைய குணசேகரன் எனும் கட்டிட தொழிலாளியின் மனைவி தான் ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ராஜலட்சுமி கர்ப்பிணியாக இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணி ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் என்னும் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 … Read more

அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் காலம் வந்துள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதன் மூலம் சுமார் 2000 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினார். பின்னர் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் 2021-22 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்கள், செவிலியர்களுக்கான தனி விடுதிகள் … Read more

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய அதிநவீன கருவி.! அரசு மருத்துவமனையில் அறிமுகம்.!

சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி மற்றும் சி.டி. சிமுலேட்டர் கருவி ஆகியவை முதல் பழனிச்சாமி தொங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.6 கோடி மதிப்பிலான புற்றுநோய் கதிர்வீச்சு … Read more

நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி ‘திருகாணி’.! அரசு மருத்துவர்களுக்கு சவால்..பின்னர் நடந்தது என்ன.?

புதுக்கோட்டை மாவட்டம் புஷ்பம் என்பவருக்கு திடீரென, இருமும் போது சளியில் ரத்தம் வந்ததால், உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்குச் செல்லும் மூச்சுக்குழாயில் திருகாணி இருப்பதை கண்டறிந்து, பிறகு அதை லாவகமாக முறையில் அகற்றப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டம்மாள் விடுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மனைவி புஷ்பம். கடந்த சில தினங்களாகவே இவருக்கு வறட்டு இருமல் இருந்துள்ளது. இதற்கு வெளியில் … Read more

மருத்துவ அலட்சியம்.! பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் விபரீதம்.!

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது வயிற்றில் மருத்துவர்கள் தவறுதலாக துணியை வைத்து தைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரியாவிற்கு வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதையடுத்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் … Read more

அதிர்ச்சி தகவல்.!அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு .!

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் இறந்து உள்ளது. ஒரு நாளைக்கு 3 குழந்தைகள் குறையாமல் பிறந்த உடனே உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கோடா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில்  அதிக அளவில் குழந்தைகள் இறப்பதாக புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை குழுவின் ஆய்வு அறிக்கையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் … Read more

மருத்துவமனையில் காணமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு..,

திருவனந்தபுரம்: அன்ஷாத் இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மடத்தரை பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி ஷம்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக 2 நாட்களுக்கு முன் காலை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் வார்டுக்கு சென்ற அவர் திடீரென மாயமானார். இது தொடர்பாக மருத்துவ கல்லூரி போலீசாரும் தேடி வந்தனர்.பின்னர் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர்.திடிரென அவரது கணவர் அன்ஷாத்துக்கு நேற்றுமுன் தினம் மாலை ஷம்னாவின் போனில் இருந்து … Read more

போதுமான டாக்டர்கள் இல்லாததால் அமைச்சர் தொகுதியில் மக்கள் வேதனை….

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உயரதிகாரி, ஆய்வு செய்யாமல் சென்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்களில் படுகாயமடைவோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதிய டாக்டர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்கு … Read more

பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 110 நாட்களே ஆன பெண் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை மீட்ட மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த், காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.