சென்னையில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னையில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக கொண்டாடப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாப்பட்டது.இதற்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில்  சென்னையில் 6 இடங்களில் இதுவரை 1,400 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

முகுர்த்த தினம் மற்றும் விநாயக சதுர்த்தி காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது . விநாயகர் சதுர்த்தி நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று முகுர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இருமடங்குளாக அதிகரித்துள்ளது இந்நிலையில் நாளை முகுர்த்த தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் … Read more

விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் உஷார் ..!

நாடு முழுவதும் வரும் திங்கள் அன்று விநாயகர் சதுர்த்தி கோலகலமாக துவங்க உள்ளது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைநகர் சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் அதன் உடன்  செப்.5, 7, 8 ம் தேதிகளில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று  விநாயகர் சிலையை கடலில் கரைக்க அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி-காவல்த்துறை

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக கொண்டாடப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாப்படுகிறது.இதற்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை காவல்த்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,    சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவல்த்துறையின் அனுமதியோடு, 2700 சிலைகள் வைக்கப்பட்டது . பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று  சென்னை காவல்துறை தரப்பில் … Read more

விநாயகர் சதுர்த்தி எதிரொலி !ஈரோட்டில் தொடரும் கைது நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் உள்ள ஈரோட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் கடந்த சில நாட்களாக நாட்களாக  இரவு பகல் என்று பாராமல் … Read more

எல்லையில் உள்ள இராணுவ வீரர்களுக்காக 10 வருடங்களாக விநாயகர் சிலை வாங்கிய பெண்..!

செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு  முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பூன்ச் மாவட்டத்தை  சார்ந்த கிரண் இஷ்ஹெர்  என்பவர் தற்போது மும்பையில் உள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  தனது சொந்த ஊரான பூஞ்ச் மாவட்டத்தில்  விநாயகர் சதுர்த்தியை கொண்டாட  மும்பையில் இருந்து மூன்று பிரமாண்டமான  விநாயகர் சிலைகளை வாங்கி உள்ளார். இந்த விநாயகர் சிலையின் உயரம் 6.5 அடி கொண்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் … Read more

பக்தர்களை கவரும் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

கும்பகோணத்தில்  பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்  இந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை அருகே பகவத் விநாயகர் கோயில் உள்ளது.இந்த கோவிலில்  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயிலில் பணத்தாள் மற்றும் காசுகள் கொண்டு விநாயகருக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இந்த விநாயகரை … Read more

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் இந்த தினத்தில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.இதன் பின்னர் சிலையை கடல், ஆறு உள்ளிட்ட இடங்களில் கரைக்கப்படுவது வழக்கமாகும்.இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி … Read more