அமலாக்கத்துறை அதிகாரி கைது.. FIRல் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள்!

Ankit Tiwari

மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வரும் அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29ம் தேதி திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்பு கொண்டு அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்துபோன வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கதுறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், இதனால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என கூறியுள்ளார். அதன்படி, அந்த … Read more

குறித்த நேரத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை… ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனும் சஸ்பெண்ட்.!

ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததற்காக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து அரியானா உள்துறை அமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.  அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை, விகாஸ் பவனில் வைத்து மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 25 புகார்கள் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு புகாராக, போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு … Read more

தளபதியை முந்திய ஆண்டவர்.! “விக்ரம்” தான் நம்பர் 1.. அப்போ அஜித் நிலைமை.?!

இந்த வருடம் பல பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது என்றே கூறலாம். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் குறித்த விவரத்தை தயாரிப்பாளரும், சினிமா விர்சகருமான ஜி.தனஞ்செயன் தன்னுடையை யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். 1.விக்ரம்   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி … Read more

#FIR: பீகாரில் தோனி உள்ளிட்ட 7 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் 7 பேர் மீது பீகாரில் உள்ள பெகுசராய் நகரில் திங்கள்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட்டின் காசோலை பவுன்ஸ் செய்யப்பட்டதால்,எஸ்கே எண்டர்பிரைசஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த காசோலையின் மதிப்பு  30 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தோனி நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தை சந்தைப்படுத்ததலில்  ஊக்குவித்தார் என்பது … Read more

#ViralVideo:”உன் பெயர் முகமதுவா?”-மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி?..!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் … Read more

கைது செய்யும் வரை உடலை எடுத்துச் செல்ல மாட்டோம் – மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம்!

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என்று மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம் கோரிக்கை. கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது … Read more

அப்பா மேடையில் பேசுகிறார்.! மகன் கண்ணீர் விட்டு அழுகிறார்.! FIR-ன் உருக்கமான நிகழ்வுகள்.!

விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். எஃப்.ஐ.ஆர் படம் தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி  விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் … Read more

இப்படி ஒரு ட்ரைலரை நாங்க எதிர்பார்க்கல.! மிரட்டிய கெளதம் மேனன் – விஷ்ணு விஷால்.!

விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். இவர் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் FIR. தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி இந்த படம் விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக … Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை; எப்ஐஆரில் எம்எல்ஏ மகன் பெயர்..!

தெலுங்கானாவில் தம்பதிகள் மற்றும் அவர்களது மகள்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகுடெம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக் குறிப்பில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் மகனின் பெயர் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தை சார்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது 2 மகள்கள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் … Read more

சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு …!

சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை கங்கனா ரனாவத் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தார். அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள் என ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களை அவரது காலில் போட்டு நசுக்கினார் எனவும் அவர் … Read more