அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!

FIFISH E-GO

சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்..!

திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி சென்ற சென்றடைந்தார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக்கிலும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். முதல்வரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ட்ரோன்-வைரலாகும் வீடியோ

ஸ்பெயினில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவனின் உயிரை  ட்ரோனின் உதவியுடன் கைப்பற்றினர். ஸ்பெயினின் வலென்சியா கடற்கரையில் கடலின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை கவனித்த உயிர் காக்கும் குழுவினர் ட்ரோன் மூலம் , லைஃப் ஜாக்கெட் ஒன்றை கடலில் வீசி சிறுவனை  கடலில் முழுகுவதிலிருந்து காப்பாற்றினர். மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. A lifeguard drone saved the life of a 14-year-old boy who was struggling … Read more

ஸ்விக்கி வாடிக்கையாளர்களே …, இனிமேல் ட்ரோன் மூலம் தான் டெலிவரி…!

நவீனமயமாகியுள்ள உலகத்தில் இயந்திரங்களே மனிதர்களின் வேலையை  செய்யும் வகையில் காலம் மாறி வருகிறது. பல நிறுவனங்கள் உணவுகள், உடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மளிகை பொருட்களை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்னும் இந்த ட்ரோன் சேவை அதிகாரபூர்வமாக … Read more

#Breaking:”இனி கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணித்திடுக” -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பூமியின் கீழ் உள்ள சுரங்கங்கள்,கனிமங்கள் ஆகியன தேசத்தின் சொத்துகள் என்ற உயர்நீதிமன்றம்,தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில்,தேசத்தின் செல்வம் மற்றும் பொதுநலனையும் பாதுகாத்திட வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் சுரங்கங்களுக்கு உரிமத்தொகை நிர்ணயிக்க ட்ரோன் மூலம் அளவிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு … Read more

#BREAKING : அபுதாபி ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!

அபுதாபி ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.  முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும், ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு … Read more

#BREAKING : அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்..!

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல். முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சென்னை மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவு ..!

சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் ட்ரோன் காவல் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனபடி, சென்னையில் ரூ.3.60 கோடியில் நடமாடும் ட்ரோன் காவல் அலகு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி கொடுத்த நிலையில், இதன்மூலம், கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் ட்ரோன் மூலம் கண்காணிக்க புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உணவு டெலிவரி ட்ரோனுடன் சண்டையிட்ட காகம்…! வீடியோ உள்ளே…!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்த ட்ரோனை தாக்கிய காகம்.  இன்று அனைத்து நாடுகளிலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகள் பொருட்கள் வீடுதேடி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் உணவுகளை வீடு தேடி வந்து தருவது போல, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உணவை டெலிவரி செய்வதற்காக  பறந்த டெலிவரி  ட்ரோன்களுடன் காகங்கள் சண்டையிட்டு உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் … Read more

கோவையில் நாளை முதல் டிரோன் பறக்க தடை..!

கோவை சூலூர் இராணுவ விமானபடை தளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை முதல் வரும் 6-ம்தேதி வரை டிரோன் பறக்க தடை. குடியரசு தலைவர் அவர்கள் வருகையை முன்னிட்டு சூலூர் விமானநிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 03.08.2021 முதல் 06.08.2021 வரை பறக்கும் கலம் (Drone) பறக்க தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தலைவர் அவர்கள் 03.08.2021 அன்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு … Read more