நாய் இறைச்சி சாப்பிடலாம்..! ஆனால் வளர்க்கக் கூடாது… அதிரடி தடை விதித்த நாடு

North Korea: வட கொரியா நாட்டில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான ஒரு நாடாக வட கொரியா விளங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகம் வெளியில் தெரிவதில்லை. அந்நாட்டின் அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டால் மட்டுமே அந்நாட்டின் நடப்பது குறித்த தகவல்கள் வெளிவரும். Read More – இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! அந்த வகையில் வட கொரியாவில் நாய்களை … Read more

காவல் துறையினர் நாய்களை போல தூங்குகிறார்கள் – கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

காவல் துறையினர் நாய்களை போல தூங்குகிறார்கள் என கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மாடுகள் கடத்தப்படுவது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சராக அராகா ஞானேந்திரா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் மாடுகளை கடத்துபவர்கள் குற்றத்தில் வழக்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் அதிகாரிகளுக்கு அது நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நாய்களைப் போல தூங்குகிறார்கள். காவல்துறையினருக்கு சுயமரியாதை தேவை ஒட்டுமொத்த காவல்துறையும் கெட்டுப் போயுள்ளது. நாங்கள் கூலியும் கொடுக்கிறோம். ஆனால் ஊதியத்தில் மட்டும் … Read more

அதிர்ச்சி : கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!

கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நாய்கள், குரங்குகள், மயில்கள் ஆகிய விலங்குகளுக்கு எதிரான வதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள  ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினருக்கும், விலங்கினங்கள் மீட்பு படைக்கும் கிராம மக்கள் … Read more

20 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை – உத்தரப்பிரதேசம்..!

உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சாப்பிடும் ரொட்டிகளில் விஷம் கலந்து நாய்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் அவற்றை சாப்பிட்ட 20 நாய்கள் தற்போது உயிரிழந்துள்ளது. மேலும், இது குறித்து பசௌரா கிராமத்தின் தலைவர் சுக்நந்தன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு உணவில் விஷம் … Read more

தெரு நாய்கள் மீது ஆசிட் வீச்சு – 5 நாய்கள் உயிரிழப்பு…!

மத்திய பிரதேசத்தில் தெரு நாய்கள் மீது ஆசிட் வீசியதில் 5 நாய்கள் உயிரிழந்துள்ளதால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியின் மகாலட்சுமி நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றிந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரக்கூடிய மக்கள் சிலர் தெருநாய்கள் மீது ஆசிட் வீசியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய சில மக்கள் நாகஜிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரில் தங்கள் காலனி … Read more

ரஷ்யாவில் நீல நிறத்தில் கும்பலாக சுற்றி திரியும் நாய்கள் – காரணம் இது தானாம்!

ரஷ்யாவில் நாய்கள் சில நீல நிறத்தில் சுற்றி திரிவது போன்ற புகைப்படங்கள் வைரலாகியதை அடுத்து, தொழிலர்ச்சாலைகளில் இருந்து வெளியாகியுள்ள இரசாயனங்கள் தான் இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யாவிலுள்ள நிஷ்னி நோவ்கோரோட் மாகாணத்தில் உள்ள நாய்கள் கும்பல் கும்பலாக நீல நிற ரோமங்களுடன் சுற்றி திரியும் புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் இந்த நாய்கள் திடீரென நீல நிறத்தில் மாறுவதற்கான கரணம் என்ன என தெரியாமலேயே இந்த புகைப்படங்கள் இணையத்தில் … Read more

4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள்!

4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள். கடந்த 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த 4 வருடத்தில், வெள்ளை மாளிகையில், எந்த செல்ல பிராணிகளும் வளர்க்கப்படவில்லை. டிரம்புக்கு முன் 8 ஆண்டுகள் அதிபராக இருந்த ஒபாமா, போச்சுகீசிய நாய்களான, ‘போ’, ‘சன்னி’ என்ற இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துள்ளார். அதன் … Read more

நாய் போலவே தாக்குவேன்..சீண்டிய கமல்…சீறும் சிந்தியா..

 மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை  கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது … Read more

நாய்களுக்காக சவுதியில் திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே!

சவுதியில் நாய்களுக்காக திறக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கஃபே. சவுதி அரேபியாவில் நாய்களுக்காக அட்டகாசமாக உணவருந்த கூடிய விடுதி போன்ற ஒரு கஃபே ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தீ பார்க்கிங் லாட் என பெயரிடப்பட்டுள்ள இந்த கடையை குவைத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் குவைத்திலிருந்து சவுதி அரேபிய வந்தபொழுது நாயுடன் கடற்கரையில் நடந்து செல்ல ஆசைபட்டேன். ஆனால் எனக்கு மட்டும்தான் அனுமதிக்கப்பட்டது, எனது நாயை கடற்கரை ஓரத்தில் அழைத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல இங்கே … Read more

27 ஆண்டுகளாக நாய்களை பாசமுடன் வளர்க்கும் நல் உள்ளம் கொண்ட பெண்மணி!

27 ஆண்டுகளாக நாய்களை பாசமுடன் வளர்க்கும் நல் உள்ளம் கொண்ட பெண்மணி. இன்று பலரின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் என்றால் அது நாயாக தான் இருக்கும். அந்த வகையில், மதுரையை சேர்ந்த, அலங்காநல்லூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வருபவர் புஷ்பம் என்ற பெண்மணி. இவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிற நிலையில், தனிமையில் வசித்து வரும் இவர், தெருவோரங்களில் வசித்து வரும் நாய்கள் அழைத்து வந்து அவைகளுக்கு உணவு மற்றும் … Read more