ரஜினி உடன் கூட்டணியா? விளக்கமளிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, அவர் துணை முதல்வரது கருத்துக்கு எதிர்மறையாக பதிலளித்து கருத்து கூறியுள்ளார்.  ஜனவரி மாதம் ரஜினி அரசியலுக்கு வருவதாக தற்பொழுது அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி, அரசியல் களத்தில் இறங்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்கள் முழுவதிலும் இது குறித்து தான் கருத்துக்கள் கூறப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் … Read more

சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் – துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை!

சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மறைந்த பிரபலமான தமிழ் திரைப்பட நடிகரும், ரசிகர்களால் நடிகர்  திலகம் என புகழப்படுபவருமாகிய சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று சென்னை அடையாறு மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் படத்திற்கு மலர் தூவி … Read more

பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திமுக தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவருக்கு இது 69-வது பிறந்த நாள் ஆகும்.இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பழனிசாமி … Read more

பேனர் வைப்பதை நிறுத்துங்கள் !அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளனர். பேனர் மேலே விழுந்து சென்னையில் இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.   மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் அறிக்கை. கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும் அன்பு வேண்டுகோள் ! pic.twitter.com/ig5rpSXfrv … Read more

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட இடைக்கால தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம்  சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலதடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு  சங்க … Read more

நீலகிரி வெள்ள பாதிப்பு: இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

நீலகிரி வெள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்கிறார். நீலகிரியில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த  கனமழை காரணமாக அவலாஞ்சி பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் அங்குள்ள பல பகுதியில்  போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான  மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வு செய்தார்.இந்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் … Read more

பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு!ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை  தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட  11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர். இந்த விவகாரம்தொடர்பாக  திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க … Read more

100 நாள் வேலை திட்டத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்-பன்னீர்செல்வம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து  வேலூர் ஒடுகத்தூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்த முறை … Read more

விபத்துக்குள்ளானது துணைமுதல்வர் பன்னீர் செல்வத்தின் பிரச்சார வாகனம்

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின்  பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். … Read more

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்!!!

ப்ரெண்டான் டாரன்ட் என்ற ஆஸ்திரேலியா நபர்  நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக  ப்ரெண்டான் டாரன்ட் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ப்ரெண்டான் டாரன்ட் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு விட்டார். நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறிஸ்ட் சர்ச்சிலுள்ள இரு மசூதிகளில்  கடந்த வெள்ளிக்கிழமை ப்ரெண்டான் டாரன்ட் என்ற ஆஸ்திரேலியா நபர்  நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக  … Read more