குஜராத் தொங்கு பாலம் விபத்து – தமிழக ஆளுநர் இரங்கல்

குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்.  குஜராத்தில் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குஜராத் மாநிலம் மோர்பி, என்ற இடத்தில் பாலம் விபத்துக்குள்ளானதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். … Read more

50 ஆண்டுகளாக குளிக்காத உலகின் மிகவும் அழுக்கான மனிதர் காலமானார்…!

‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற அமௌ ஹாஜி காலமானார்.  ஈரானின் கெர்மான்ஷாஹ் என்ற பகுதியில் வசித்துவருபவர் அமௌ ஹாஜி. இவருக்கு வயது 94. இவருக்கு தண்ணீர் என்றாலே மிகவும் பயமாம். குளித்தால் இறந்து விடுவோம் என்ற பயத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமலே இருந்து வந்துள்ளார். ஹாஜியை குளிக்கவைக்க பலர் முயற்சி செய்த போதிலும் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது. இந்த நிலையில், ‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற இவர் … Read more

கோவையில் கார்விபத்து – உயிரிழந்தவர் இவர்தானா…?

கோவையில்,  காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவை உக்கடம் அருகே, ஈஸ்வரன் கோயில் அருகே கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019-ல் தேசிய பாதுகாப்பு முகமை … Read more

ஆயிரத்தில் ஒருவன் பட கலை இயக்குனர் மாரடைப்பால் மரணம்..! சோகத்தில் திரையுலகினர்..!

கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார்.  ஆயிரத்தில் ஒருவன், இறுதி சுற்று, சர்கார், தர்பார், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய சந்தானம் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாணவி கொலை – குற்றவாளி சதீஷ் கைது..!

ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷ் கைது.  சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சதீஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய … Read more

முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கோவை தங்கம் மரியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல். வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கோவை தங்கம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கோவை தங்கம் அவர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கோவை தங்கம் அவர்கள் … Read more

முலாயம் சிங் மறைவு – இன்று நல்லடக்கம்..!

முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட … Read more

முலாயம் சிங் யாதவ் மறைவு – டிடிவி தினகரன் இரங்கல்

திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என டிடிவி தினகரன் ட்வீட்.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ், கடந்த ஒரு வாரமாக  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நாட்டின் … Read more

இவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.  உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான முலாயம் சிங் யாதவ், கடந்த ஒரு வாரமாக ஹரியானாவின் குருகிராமில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் ஐயூசிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முலாயம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து … Read more

திருவாரூரில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

திருவாரூரில் சிக்கன் சாப்பிட்ட செல்வ முருகன் என்ற இளைஞர் உயிரிழப்பு.  திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், இவருக்கு பூ முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில்,  5 வகை சாதத்துடன் சேர்த்து சிக்கன்  பரிமாறப்பட்டது. இந்த  சாப்பிட்ட சிறிது  நேர்தத்தில், … Read more