நம் நாட்டில் கோலம் போடுவது கூட தேசவிரோதம் தான்! டிவிட்டரில் விமர்சித்த எம்பி கனிமொழி!

குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

போராட்டத்தில் சேதமடைந்த பொருட்களுக்காக 6 லட்சம் ரூபாய் வசூல் செய்து கொடுத்த இஸ்லாமியர்கள்!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பொது சொத்துகளுக்கு இழப்பீடாக 6 லட்சம் ரூபாயை இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் போராட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அதனால், பொதுச்சொத்துக்கள் சேதம் அடைந்தன. … Read more

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் பிரமாண்ட பேரணி!

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களது குடும்பத்தாருடன் பேரணி நடத்தி வருகின்றனர்.  மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் போராட்டம் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்று … Read more

குடியுரிமை திருத்த சட்டமானது, எதிரானது என்று கருதப்படுவது தவறானது -ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.  இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டமானது, எதிரானது என்று கருதப்படுவது தவறானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழா நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டமானது … Read more

கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள்! கங்குலிக்கு அறிவுரை கூறிய நக்மா!

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கங்குலி, என் மகள் சின்ன பிள்ளை. அவளுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்பது போல தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கங்குலி மகள் சனா … Read more

திருமணதிற்கான போட்டோக்களிலும் புதுவிதமாக போராட்டத்தில் ஈடுபட்ட கேரள இளம் ஜோடி!

புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு  விதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.  கேரளாவில் ஒரு புதுமண தம்பதி  தங்களது திருமணத்திற்காக எடுத்த  போட்டோஷூட் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.  மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பலர் பலவிதமாக போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை கட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தை சேர்த்த புது இளம் ஜோடியான அருண் … Read more

15 பேர் பலி! போலீசார் வீட்டிற்கு செல்ல தடை! போர்க்கலமாகிவரும் உ.பி!

குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இதில் உத்திரபிரதேசத்தில் போராட்டத்தில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் அசாம் தொடங்கி அடுத்து வடமாநிலங்களில் பரவி அடுத்து தென் மாநிலங்கள் என பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி … Read more

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்கள் யோசனை தெரிவிக்கலாம்! – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

மத்திய அரசானது குடியுரிமை சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டுவந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த சட்டம் தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மத்திய அரசு அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, இந்தியாவில் குடியேறிய வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களில் முஸ்லீம்கள் தவிர இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என ஏனைய மதத்தை … Read more

திறந்த இரண்டாம் நாளே ஜும்மா மசூதியில் போராட்டம்..!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து, டெல்லி ஜூம்மா மசூதிக்கு தொழுகைக்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்பொழுது குடியுரிமை சட்ட திருப்பு மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நாள்தோரும் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து … Read more

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாணியம்பாடியில் சுமார் 7000 பேர் ஆர்ப்பாட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  தமிழ்நாட்டில் வாணியம்பாடியில் சஸ்லின் ஜமாத் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர … Read more