பட்டம்விடும் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! பட்டத்துடன் பறந்த 3 வயது சிறுமி.!

திடீரென எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு மேலே பறந்த சிறுமியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உலகத்தில் உள்ள பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று தற்போது சில நாடுகளில் பட்டம் விடும் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பட்டம் என்றால் சிறிய வகை பட்டமாக இல்லாமல் பல்வேறு வகையான உருவங்கள் கொண்ட ராட்ச பட்டங்களை பறக்க விடுவார்கள். இதை ஒரு திருவிழா போன்று கொண்டாடுவார்கள். அந்த வகையில், … Read more

2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்! பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு. நேற்று பெங்களூருவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளான். இதனையடுத்து, அவனது பெற்றோரை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், சிறுவனை விடுவிக்க ரூ. 2 கோடி பிணையத் தொகையாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு, மேலும், மிரட்டல் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், தங்கள் மகன் கடத்தப்பட்டது குறித்து சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.  இதனையடுத்து, பெங்களூருவின் … Read more

விளையாட்டு வினையானது! ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஆமணக்கு காயை சாப்பிட்ட 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, சிறுவர் சிறுமிகள் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அங்கிருந்த ஆமணக்கு காய்களை சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, அன்றிரவே நள்ளிரவு சிறுவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்கள்  மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சாத்தான் குளத்தில் தொடரும் விபரீதங்கள்! டிவி பார்க்க சென்ற 7 வயது சிறுமி கொலை!

சாத்தான் குளத்தில் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 7 வயது சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம். தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான் குளத்தில் தந்தை – மகன் போலீசாரால்  கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள, கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவர், கணவரை பிரிந்து தனது மகன்  மற்றும் மகளுடன் வசித்து … Read more

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம்!

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம். அஸ்ஸாம் மாநிலம், கோக்ராஜர் நகரின் தெற்கு தெங்காபரா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து மூன்று வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது, தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், மூன்று வயது சிறுவன் கொலைக்கு கொக்ராஜர் நகரத்தின் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு!

திண்பண்டம் என்று நினைத்து, நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு. திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொட்டியம் பகுதியை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேர் அங்குள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர். மீன்களை பிடித்துக்கொண்டு தனது சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு சென்ற தமிழரசன், மீதமுள்ள நாட்டு வெடி ஒன்றை அங்கு வைத்து சென்றுள்ளார்.  அந்த வேளையில், அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், மீதமுள்ள … Read more

9 வயது சிறுமியின் மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது.!

சாக்லேட் வாங்கி தருவதாக 9 வயது சிறுமி மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது. மதுரையில் ரங்கசாமி என்ற முதியவர் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ரங்கசாமி சாக்லேட் வாங்கி தருவதாக அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் குழந்தையை அழைத்துச் சென்ற ரங்கசாமி குழந்தையிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி அலறி அடித்து தன் … Read more

இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள்!

இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள். இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர்.  தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.  வழிமுறைகள்  நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும்.  மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் … Read more

பெற்றோர்களே! நீங்க தான் உங்க பிள்ளைகளுக்கு வழிகாட்டி! அப்ப நீங்க என்ன செய்யனும் தெரியுமா?

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தையை ஒழுக்கமாக நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்பி அதிகமாக பிரயாசப்படுகிறோம். ஆனால், பிள்ளைகள் சரியான பாதையில் நடப்பதற்கு, நாம் ஒரு சரியான பாதையாக இருக்க வேண்டும். உங்களது செய்ல் முறைகள் தான், உங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறது.  செயலால் பேச வேண்டும்  நாகரீகம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், குழந்தைகளை வார்த்தைகளால் சொல்லி திருத்த முடிவதில்லை. அவர்களை செயல்களால் தான் திருந்த முடியும்.  உதாரணமாக, … Read more

10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த கோவில் அர்ச்சகர் கைது! போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த கோவில் அர்ச்சகர் கைது. இன்று பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. பெண்களை பாதுகாப்பதற்காக அரசு சிறப்பு சட்டங்களை இயற்றினாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  இந்நிலையில்,  சிவகுமார்(59) என்னும் கோவில் அர்ச்சகர், கடந்த புதன்கிழமை அன்று, சென்னை மாடிப்பக்கம் அருகே உள்ள 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, பயத்தில் … Read more