வீட்டை விட்டு ஓடிய 17 வயது சிறுமி! மீண்டும் குடும்பத்துடன் இணைத்த போலீசார்!

மும்பையின் கவர்ச்சியான வாழ்க்கை முறையை கண்டு ஈர்க்கப்பட்டதால், வீட்டை ஓடிய 17 வயது சிறுமியை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசார்.  உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்திலுள்ள ஜமல்பூர் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்துள்ளார். ஜனவரி 18-ஆம் தேதி மும்பையில் இருந்து 35 கிலோன் மீட்டர் தூரத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் உள்ள ராஜ்மௌலி … Read more

பெற்றோரின் அலட்சியம்! 123 காந்தமணிகளை விழுங்கிய 5 வயது சிறுவன்!

5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள். சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான். இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். … Read more

உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபர்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம்.  உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதென்பதே இந்திய வளாகத்தில் சில சமுதாயத்தினர் தவிர யாரும் செய்துகொள்ளாத ஒன்று. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் எனும் மாவட்டத்தில் வசிக்க கூடிய கிருஷ்ணா என்பவர் தன்னுடன் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார். ஷோபா, ரினா … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம் – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சிறுவர்களின் ஆழ்துளை கிணறு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் நேற்று ஹரிகிருஷ்ணன் என்பவரால் அவரது வயலில் தோண்டப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் அவரது 4 வயது மகன் மூடப்பட்டிருந்த இரும்பு சட்டியை அகற்றி விளையாடிய போது எதிர்ப்பாராத விதமாக அதற்குள் தவறி விழுந்துவிட்டார். இந்நிலையில், தீயணைப்பு  துறையினருக்கு இது … Read more

ஐந்து வினாடி தான்! சிறுவன் செய்த அட்டகாசமான செயல்!

கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் இயற்கை உணவுகளை தேர்ந்தெடுத்த சிறுவன். நியூயார்க்கில் உள்ள மளிகைக்கடை ஒன்றில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் வேடிக்கையான ஒரு விளையாட்டில் ஈடுபட்டார். அந்த விளையாட்டு என்னவென்றால், அந்த சிறுவனிடம் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் அளித்தால், அச்சிறுவனுக்கு கொடுக்கப்படும் ஐந்து வினாடிகளில், அவனுக்கு தேவையான பொருட்களை அந்த மளிகை கடையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். இதனையடுத்து, அந்த சிறுவனிடம் கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன்  சரியான பதில் அளித்துள்ளார். … Read more

குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர் – ஐ.சி.எம்.ஆர்

குழந்தைகள் கொரோனா வைரஸை பரப்புகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படிதாராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸானது, பிறந்த குழந்தைகள் முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வாராய் அனைவரையும் தாக்குகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா, நாத்தில் குழந்தைகள் இடையே கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டு உள்ளது. … Read more

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து!

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது. இந்நிலையில்,  கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தை – உணவுகுழாயிலிருந்து அகற்றம்!

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தையின் உணவுகுழாயிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அடுத்து உள்ள கொழுந்தம்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒரு வயது மகள் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இந்நிலையில் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் சென்றுள்ளனர். குழந்தையின் கழுத்து பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழாயில் அந்த ஐந்து ரூபாய் நாணயம் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். … Read more

அதிகமான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இவர்களே! ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவு!

தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2019-ல் 28% சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பள்ளிக்கே செல்லாத குழந்தைகளை விட பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்கள்தான் அதிக குற்றங்களில் ஈடுபடுவதாகவும், அதிலும் ஆதரவற்றவர்களை விட பெற்றோருடன் வாழும் சிறார்கள் தான் இந்த குற்றங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2019-ல் மட்டும் 3305 சிறார்கள் குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதில் 2470 பேர் ஆரம்பப்பள்ளி அல்லது இடை கல்வி பயின்றவர்கள். படிப்பறிவு … Read more

சென்னையில் 3 வயது சிறுமி கடத்தல்..!

சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பப்லு இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருடைய நண்பர் பவன் குமார் என்பவர் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பப்ளிக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். பவன்குமார் பப்லுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது பப்லுவின் 3 வயது சிறுமிக்கு உணவு வாங்கித் தருவதாக பவன்குமார் அழைத்துச் சென்று அந்த சிறுமியை … Read more