இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வேண்டாம்.?! போரிஸ் ஜான்சன் அதிரடி நகர்வு…

யாரை வேண்டுமாலும் பிரதமராக தேர்ந்தெடுங்கள். ஆனால், ரிஷி சுனக் வேண்டாம் என்பது போல தனது கருத்தை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார் போரிஸ் ஜான்சன்.  பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். தனக்கு எதிரான நிலைப்பாடு தனது கட்சிக்குள் எழுந்த காரணத்தால் கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்தார். இதனால் தற்போது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில் தற்காலிக பிரதமராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிரதமர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று … Read more

கட்சி.. ஆட்சி.. ரெண்டும் வேண்டாம்.. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.!

போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.  பிரிட்டனில் கடந்த 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை பிடிதிதது. போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமனாரார். அண்மையில் பாலியல் புகாரில் சிக்கிய ஒருவருக்கு போரிஸ் ஜான்சன் கட்சியில் பதவி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவரது சொந்த கட்சியினரே ஒவ்வொருவராக பதவியை ராஜினாமா செய்ய போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு போதிய ஆதரவு இல்லாமல் … Read more

சற்று முன்…இந்திய பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் சந்திப்பு

இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டு நாள் பயணத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை(நேற்று) குஜராத் வந்தடைந்தபோது அவருக்கு குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அவர் சென்ற நிலையில்,அங்கிருந்தவர்கள் உதவியுடன் கைத்தறி இயந்திரத்தை இயக்கி பார்த்தார்.அதன்பின்னர்,குஜாரத்தில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக போரிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து,பஞ்ச்மஹால் பகுதியில் உள்ள பிரிட்டனை சேர்ந்த ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அதன்பின்னர்,அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் … Read more

இந்தியா வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அதன்படி,குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்சிகளில் போரிஸ் ஜான்சன் பங்கேற்கிறார். இதனையடுத்து,பிரிட்டன் பிரதமர் போரிஸ் நாளை (ஏப்ரல் 22ஆம் தேதி) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா- பிரிட்டன் இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ரீதியான … Read more

முதல் முறையாக…இன்று இந்தியாவுக்கு வருகை புரியும் பிரிட்டன் பிரதமர் போரிஸ்!

பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்ற பின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு  திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார்.தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பிரிட்டன் பிரதமர் போரிஸ் இன்று மற்றும் நாளை அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு … Read more

ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது; எச்சரிக்கை – பிரிட்டன் பிரதமர்!

ஓமைக்ரான் வேகமாக பரவி வருகிறது எச்சரிக்கையாக இருங்கள் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வகை தற்பொழுது 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், சந்தேகம் எதுவும் வேண்டாம். ஓமைக்ரான் பேரலை வந்து கொண்டிருக்கிறது. ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே நாட்டில் ஐந்தாம் கட்ட … Read more

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்…!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் வயது முதிர்வால் காலமாகியுள்ளார். இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் அவர்கள் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் சார்லட் ஜான்சனுக்கு 79 வயது ஆகிறது. உடல் நலக் குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது தயார் குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என ஒரு நிகழ்வில் தாயாரை புகழ்ந்து கூறியுள்ளார். இந்நிலையில், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் … Read more

தாக்குதல் நடந்தாலும் மீட்பு நடவடிக்கை தொடரும் – இங்கிலாந்து பிரதமர்!

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றாலும், மீட்பு நடவடிக்கை தொடரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் மற்றும் நாட்டிலுள்ள பிற நாட்டினர்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென காபூல் விமான நிலையத்தின் அருகே இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

அமைச்சருக்கு கொரோனா.., தனிமைப்படுத்தி கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் ..!

சுகாதாரத்துறை அமைச்சர் சஜீத் ஜாவீத்திற்கு தொற்று உறுதியானதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முதல் தனிமைப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்தில் கொரோனா முதல் அலை போது கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தொற்று உறுதியாகிசிகிக்சை பெற்று பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போதும் கொரோனா அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 50,000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் சஜீத் ஜாவீத்துடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் … Read more

மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..!

பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை  கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது, பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருடன் தொடர்பில் … Read more