Somalia Blast: சோமாலியாவில் நடந்த அடுத்தடுத்து நடந்த 2 கார் குண்டுவெடிப்பு -12 பேர் பலி

சோமாலியா தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 12 பேர் இறந்ததாகவும் ,20 பேர் காயமுற்றுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியாவின் தலைநகரில் முக்கிய அரசாங்க அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பரபரப்பான சந்திப்பில் சனிக்கிழமை இரண்டு கார் குண்டுகள் வெடித்துள்ளது.இரண்டாவது குண்டுவெடிப்பு ஒரு பரபரப்பான உணவகத்தின் முன் நிகழ்ந்துள்ளது. ஆமின் ஆம்புலன்ஸ் சேவையின் இயக்குனர், பல காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களை சேகரித்ததாக கூறினார். … Read more

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு; 65 பேர் காயம்!

ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அபு அலி சினா-இ-பால்கி மாவட்ட மருத்துவமனையின் தலைவர் கௌசுதின் அன்வாரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்பின் போது கிட்டத்தட்ட 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.

#BigBreaking:காபூல் பள்ளியில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்பு – 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கல்வி நிலையங்களை குறிவைத்து அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதாகவும், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,மேலும் பல பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் மற்றும் நகரின் அவசர மருத்துவமனையின் தகவலின்படி,அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் காரணமாக பல குழந்தைகளை காயப்பட்டுள்ளனர் என்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் ஷாஹீத் உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலும்,காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி … Read more

அதிர்ச்சி சம்பவம்…மைதனாத்தில் புதைக்கபட்ட குண்டு வெடிப்பு – 12 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என தகவல். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் வெள்ளிக்கிழமை(நேற்று) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதி: அதனை உறுதி செய்யும் வகையில்,ஹெராட் நகரின் PD 12 இல் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது, 25 பேர் காயமடைந்தனர் என … Read more

Bomb blast:பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் காயம்

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை காலை 7 மணியளவில் சிறிய அளவிலான  வெடிகுண்டு வெடித்ததில்  ஏழு பேர் சிறிய காயப்பட்டுள்ளதாக எஸ்பி சுஷில் குமார் தெரிவித்துள்ளார். “வெடிகுண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு, லுதன் ரஜக் என்ற நபருக்கு சொந்தமான வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளது.அந்த பிளாஸ்டிக் பையை சிறுவன் ஒருவன் திறந்த பொழுது வெடிகுண்டு வெடித்துள்ளது.அந்த வேளையில் ணகள நின்றுக்கொண்டிருந்த சிறுவன் உடன்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். “வெடிகுண்டின் தீவிரம் குறைவாக இருந்ததால்  7 பேருக்கு சிறிய … Read more

#BREAKING: லாகூரில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழப்பு. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #BREAKING #Blast in #Lahore 3 people … Read more

#BREAKING: ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு.., 100 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்தனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே பலியாகினர் எனவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  

#Breaking:ஆப்கன் தலைநகர் காபூலில் மசூதி அருகே குண்டு வெடிப்பு;பொதுமக்கள் பலர் உயிரிழப்பு – தகவல் …!

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் … Read more

ஈராக்கின் எர்பில் விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல்

பாக்தாத் : ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக ருடவ் டிவியை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் ட்ரோன் அல்லது ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்று ருடவ் டிவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்ககத்தை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை இரவு எர்பில் விமான நிலையத்தில் குறைந்தது ஒரு வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கான … Read more

#BREAKING: தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலைய வெளியே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. காபூலில் மீண்டும் ஐஎஸ்ஐஸ்-கே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என … Read more