#Breaking:அதிர்ச்சி…ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 5 வயதுடைய LKG மாணவன் பலி!

நெல்லை:ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயதுடைய எல்கேஜி மாணவன் பலியையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வசவப்புரம்-செய்துங்க நல்லூர் சாலையில்,பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில்,ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய நவீன் என்ற 5 வயது எல்கேஜி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும், ஆட்டோவில் பயணித்த மற்ற 5 மாணவர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,காயமடைந்த மாணவர்களுக்கு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு … Read more

#Breaking:ஆட்டோ மீட்டர் மறுகட்டணம் – போக்குவரத்து துறை ஆலோசனை!

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி,சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் இணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இன்று கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும்,நாளை நுகர்வோர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் ஆட்டோவில் மீட்டர் பொருத்தி இயக்குவது தொடர்பாகவும்,கட்டணம் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  

#Shocking:இன்று முதல் பேருந்து,ஆட்டோ,டாக்சி கட்டணம் உயர்வு!

கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த … Read more

நாளை முதல் ஆட்டோ, பஸ் டாக்சி கட்டணம் உயர்வு – எங்கு தெரியுமா?

கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய … Read more

#BREAKING: 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், பேரவையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் … Read more

இன்று முதல் தீவிர கண்காணிப்பு;மீறினால் கடும் நடவடிக்கை – போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்களை ஆட்டோ,வேன் போன்றவற்றில் அளவுக்கு மீறி ஏற்றி செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.குறிப்பாக,ஓட்டுநர் இருக்கையை பள்ளிக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும்,வாகனம் ஓட்ட சிறார்களை அனுமதிக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,இன்று முதல் இந்த விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும்,மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சென்னையில் தேர்ந்தெடுத்த 335 பள்ளிகளில் போக்குவரத்து … Read more

அதிக கட்டணம் – காவல்துறை எச்சரிக்கை!

மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு … Read more

#Breaking:இனி ஆட்டோக்களில் இவை கட்டாயம்;மீறினால் பறிமுதல் – காவல்துறை எச்சரிக்கை!

வேலூர்:ஆட்டோக்களில் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் பெயர் விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். வேலூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறார் உட்பட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலோசனைக் கூட்டம்: இதனைத் தொடர்ந்து,வேலூர் டவுன் ஏடிஎஸ்பி சுந்தர மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் … Read more

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்..!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி சென்று கொண்டிருந்த ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க இரண்டு பெண் காவலர்கள் உதவியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்த காரணத்தால் ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோ வெள்ளத்தில் சிக்கியதால் அதன் பின்னர் நகரமுடியாமல் தத்தளித்து கொண்டிருந்துள்ளது. அப்பகுதியில் இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த இரண்டு பெண் காவலர்கள் ஆட்டோவை … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு….! ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது…!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கும் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் பேருந்துகள், வாடகை ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும்  நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more