இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி ராய்ப்பூர் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ராய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் மின்கட்டண நிலுவையில் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த மைதானம் பல சர்வதேச போட்டிகளை நடத்தியது. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா … Read more

ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை … Read more

36 பந்தில் 102 ரன்கள்.. சாதனை மேல் சாதனை படைத்த ருதுராஜ்..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் … Read more

மேக்ஸ்வெல் அதிரடி சதம்.. த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் … Read more

டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை தடை செய்யும் ஆஸ்திரேலியா.! சுகாதார அமைச்சர் தகவல்.

DisposableVapes

ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை ஜனவரியிலிருந்து தடை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார். வளரும் இளைஞர்களிடையே இந்த சாதனங்கள் மிகவும் பிரபலமடைவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிலையில் அதிகளவில் காணப்படும் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் நிரப்பப்பட்ட இந்த வேப்ஸ், ஒரு வகை இ-சிகரெட் ஆகும். சாதாரண புகையிலை போல வேப்ஸ்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் … Read more

INDvAUS T20 : ஸ்மித், மேக்ஸ்வெல் உட்பட 6 வீரர்களுக்கு ஓய்வு.! அவர்களுக்கு பதில் இனி இவர்கள்…

Australia T20 squad

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளிலும் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், மேத்யூ வேட் … Read more

இந்தியா, ஆஸ்திரேலியா 2-வது டி20… வெற்றியை தொடருமா இந்தியா ..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், … Read more

எனது அணிக்காக போட்டியை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.! ரின்கு சிங்

Rinku Singh

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நேற்று (23.11.2023) முதல் டி20 போட்டியானது நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் மேத்யூ வெயிட் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், முதலில் ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு ஷார்ட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். மத்தேயு ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, … Read more

சிறந்த பீல்டிங் அணி பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நெதர்லாந்து..!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்முலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் மோசமாக செயல்பட்டனர். பீல்டிங்கில் இந்திய அணியால் சிறப்பாக செயல்படாததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிகளின் பட்டியலை  ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் 2023 ஒருநாள் … Read more

டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..!

உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக  விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் … Read more