திமுக ஆட்சிக்கு வந்தாலே இதுதான் நடக்கும் – டிடிவி தினகரன்

தொடர் குண்டு வீச்சு சம்பம் தொடர்பாக காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், அமமுக … Read more

பெரியார் படத்தை கையோடு தூக்கி சென்ற இபிஎஸ் தரப்பு.! ஓபிஎஸ்-க்கு உதவிய அமமுகவினர்.!

சென்னையில், பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த பெரியார் புகைப்படத்தை இபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றதால், அமமுகவினர் வைத்திருந்த பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ்.   இன்று தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் கொண்டாப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியினர் தங்கள் மரியாதையை பெரியார் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர். பலர் சமூக வலைத்தளம் மூலம் பெரியாரின் கருத்துக்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை அண்ணாசாலையில் … Read more

அதிமுக பிளவு.? பதவி வெறி.. சிலரின் சுயநலம்..! டி.டி.வி.தினகரன் அதிரடி கருத்து.!

இன்னோர் கட்சியில் நடக்கும் கூத்து பற்றி நாம் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. சிலரின் பதவி வெறி, சுயநலத்தால் இப்படி இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் – என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.  அதிமுக கட்சி விவகாரம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவினரும் மாறி மாறி நீதிமன்றம்  சென்று, தீர்ப்பு, மேல்முறையீடு என சென்று சென்று கொண்டிருக்கின்றனர். … Read more

#BREAKING: மருத்துவமனையில் இருந்து டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ்!

தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள், உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  இதற்காக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிடிவி தினகரன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு … Read more

அமமுக துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமனம் – டிடிவி தினகரன் அறிவிப்பு

அமமுகவில் கூடுதல் துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராக C.சண்முகவேலு (முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர்),  தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த … Read more

மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை – டிடிவி தினகரன் வாழ்த்து

மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள். U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு, மும்முறைத் தாண்டுதலில் (triple jumper) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய டிரிபிள் ஜம்பர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். செல்வ பிரபு  மும்முறைத் தாண்டுத போட்டியில் 16.15 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை … Read more

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிட மாடல்.. தமிழக அரசு இதனை செய்ய வேண்டும் – டிடிவி

போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு. தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டிருந்த … Read more

திமுகவினர் திருந்தவே இல்லை – டிடிவி தினகரன்

திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம். திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மறுபடியும் மின்தடை நிகழ்ந்து வருகிறது. விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம்தான் உருவாகியுள்ளது. திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விமரித்தார். அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டம் இல்லை, அம்மா உணவகங்கள் மூடப்பட்டு … Read more

#அன்னையர் தினம்:’அம்மா’ என்று சொன்னாலே இவரது உருவம்தான் – டிடிவி தினகரன் வாழ்த்து!

தியாகத்தின் மொத்த உருமாய்,வாழும் தெய்வமாய் நம் அனைவருக்கும் பிடித்தவருமான வார்த்தைகளால் ஒப்பிடமுடியாத அன்னையர்களின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்,நாடு முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்,தங்களை பெற்ற அன்னையர்களுக்கு பிள்ளைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதே சமயம்,தாயாக சிறந்து விளங்கும் அனைவருக்கும் அரசியல் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தியாகத்தின் திருவுருவமாக இருக்கும் அன்னையர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னையர் … Read more

#JustNow: டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை பெற சட்டவிரோதமாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தினகரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அந்தவகையில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே, கடந்த 12-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்றும் அவரிடம் … Read more