#ELECTIONBREAKING: அமமுகவுடன் ஓவைசி கூட்டணி.. 3 தொகுதிகள் ஒதுக்கீடு..!

அமமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 06.04 2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்போவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு.பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி M.P., தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தோதலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் … Read more

தீய சக்தியையும், அதர்மத்தையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்குகிறது – டிடிவி தினகரன்

வாக்குகள் நிச்சயம் சிதறாது, மக்கள் அனைவரும் அமமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக கூட்டணி குறித்து இரு தினங்களில் இறுதி செய்யப்படும். மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி குறித்து பேசியதாக வந்த தகவலில் உண்மையில்லை. அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் அமைப்பதற்குத்தான் அமமுக தொடங்கப்பட்டது. அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க பாடுபடும். நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். சட்டமன்ற தேர்தலில் … Read more

இன்று அமமுக-வில் வேட்பாளர் நேர்காணல்….!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்ளுக்கு, இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெறவுள்ளது.

அமமுகவில் நாளை வேட்பளர் நேர்காணல்., கடைசி நாளான இன்று விருப்ப மனு விநியோகம்.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் என கடந்த ஒரு வாரமாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. மேலும் இரு கட்சிகளிலும் வேட்பாளர் நேர்காணல் … Read more

அமமுகவினர் விருப்ப மனுக்களை ஒப்படைக்க 7-ம் தேதி கடைசி நாள்..!

அமமுக சார்பில் நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுகவில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 3.3.2021 முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப … Read more

பாஜகவுக்கும் அவர்களுடைய பேச்சுவார்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை – எல் முருகன்

பாஜகவுக்கும், அதிமுக அமமுகவுக்கும் இணைப்பு தொடர்பான பேச்சுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் எல் முருகனிடம், அதிமுகவுடன் சசிகலா இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பாஜக நடத்தியதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, பாஜகவுக்கும், அவர்களுடைய (அமமுக, அதிமுக) இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என கூறியுள்ளார். அதிமுக – அமமுக இடையிலான விவகாரத்தில் பாஜக தலையிடும் கிடையாது என தெரிவித்துள்ளார். இது அதிமுக – … Read more

அமமுக குள்ளநரிகள் கூட்டம்., அதிமுக சிங்கங்கள் இருக்கின்ற கூட்டம் – அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலத்தில் இருந்த எழுச்சியை தற்போதும் காண முடிகிறது என்று அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய தலைமை செயலகத்திற்கு வந்தர்களை காண்பித்து தெரிவித்துள்ளார். இந்த எழுச்சியை பார்க்கும் போது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அலை தமிழகத்தில் வீசுகின்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எல்லாம் காணாமல் போய் எல்லா தொகுதிகளிலும் … Read more

கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன்…! நான் எதற்கும் தயார்…! – அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார். அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், மதுரையின் 4 தொகுதிகளிலும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி எதை ஒதுக்கினாலும் நிற்பேன். நான் எதற்கும் தயார் என … Read more

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்…! இன்று முதல் அமமுக-வில் விருப்ப மனு விநியோகம்…!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட காட்சிகளில் விருப்பமனு விநியோகிக்கப்பட்டு வருகிறதை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று முதல் … Read more

எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜக, அதிமுகவுடன் கூட்டணிக்கு தயார் – டி.டி.வி தினகரன்

திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அமமுக தலைமையில் வந்தால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர் இல்லத்தில் சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமமுக தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம். சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் கூட்டணி முடிவானதும் தெரிவிக்கப்படும். கூட்டணி குறித்து அமமமுக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். … Read more