குடும்ப தகராறு டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை !!!!!

குடும்ப தகராலால் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தூத்துக்குடி, மேலஅலங்கார தட்டு பகுதியைச் சேர்ந்தவர் லோகராஜ். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர்  பகவதி. இவர்களுக்கு திருமணமாகி 14 மாதங்கள்ஆன நிலையில்  3 மாத ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறில் சண்டை முற்றிய நிலையில் மிகவும் வேதனை அடைந்த  லோகராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரணை … Read more

வரும் 24 ந் தேதி ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது!!!!!!

 தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் 24 ந் தேதி ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாம் சார் ஆட்சியர்  சிம்ரான் ஜீத் சிங் கலோன்  தலைமையில் நடைபெறவுள்ளது. வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் 24 ந் தேதி நடைபெறும் மனுநீதி கூட்டத்தில்  பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவின் மூலம் சார் ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம். எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் மற்றும் வாக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டுகோள் விடுத்தார் வருவாய் துறை ஆய்வாளர் வீரப்பன் !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் மற்றும் வாக்காளர்களை ஒருங்கிணைக்க வேண்டுகோள் விடுத்தார் வருவாய் துறை ஆய்வாளர் வீரப்பன். மேலும் இது  குறித்தும் அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான  பயிற்சி ஒன்றை கடந்த வெள்ளிகிழமை துவக்கி  வைத்தார். மேலும்  தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் உள்ள ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்து வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த மையத்தின் மூலம் … Read more

திருமண அழைப்பிதழில் தாய்மாமன் பெயரை அச்சிட்டதால் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு !!!

திருமண அழைப்பிதழில் தாய்மாமன் பெயரை அச்சிட்டதால் தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரமணி சாமுவேல். சமீபத்தில் இவருடைய மகன் ஜோசப்பு திருமணம் நடந்தது. அவரது மகனின் திருமண அழைப்பிதழில் தாய்மாமன்  சாமுவேலின் பெயரை அச்சிடவில்லை. சாமுவேலின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் கேட்க வரமணி சாமுவேல் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் சண்டை நிகழ்ந்துள்ளது. இந்த சண்டை முற்றிய நிலையில்  … Read more

21 தொகுதிகளிலும் இடைதேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழும் கனிமொழி எம்.பி திட்ட வட்டம் !!!!!!!!!

தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் சில நாள்களில் நடை பெறவுள்ளது. மேலும் சமீபத்தில் கோவில்பட்டிக்கு வருகை தந்தார் எம்.பி கனி மொழி. இந்நிலையில் 21 தொகுதிகளிலும் இடைதேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழும் கனிமொழி எம்.பி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் கோவில்பட்டியில் வக்கீல் தெருவில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் திமுக வடக்கு மாவட்ட நகர செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ  மற்றும் பலர் வருகை தந்திருந்தனர். மேலும் … Read more

இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் தொடங்குகிறார் முதல்வர் -அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தினை நாளை முதல்வர் ஆரம்பிக்கவுள்ளார் என்று விளம்பரத்துறை அமைச்சர்  கடம்பூர் .செ.ராஜூ   தெரிவித்துள்ளார். முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்தில்  கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி வழியாக திருநெல்வேலிக்கு வருகைதருகிறார். இதனால் அ .தி .மு.க சார்பில்  முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் .செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ முதலமைச்சர் வருகை தொடர்பாக இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்!!!

விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நாளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருநெல்வேலியில்  நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலிக்கு  வருகைதரவுள்ளார். மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றவுள்ளார். முதலமைச்சர் வருகை குறித்து பாதுகாப்பு பணிகள், வரவேற்பு முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அமைச்சர்  ஆய்வு மேற்கொள்ளும்  போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more

திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம்

கோவில்பட்டியில் திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்   போராட்டம் நடத்த படஉள்ளதாக திருக்கோயில் பணியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போராட்டம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜன.23-ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்த இருப்பதாக மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறியுள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லையப்பர் கோயில் எஸ்.வெங்கடேசன், முருகேசன், கோவில்பட்டி ந.பரமசிவன், சங்கரன்கோவில் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் … Read more

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்பு சட்டம்…..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வரும் ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலையில் சுற்றுசூழலுக்கு தீங்கு நடைபெறுகின்றது என்று தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தின் 100-வது நாள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்து தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்து இந்நிலையில் தமிழக அரசின் இந்த … Read more

மீண்டும் தொடங்கியது ஸ்டெர்லைட் போராட்டம்… SFI ,DYFI ,AIDWA ,CITU மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தால் அங்கே இருக்கும் மக்களின் சுற்றுசூழலை பாதிக்கும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் 100_வது நாளில் வன்முறையாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கோரி முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழுவை நியமித்து … Read more