சுவிட்சர்லாந்து செல்வதை மக்கள் மறக்கும் வகையில் காஷ்மீர் வளர்ச்சி அடையும்- பிரதமர் மோடி

modi

பிரதமர் மோடி நேற்று ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டு ரூ. 32,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். அங்குள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற உரையாற்றிய பிரதமர், “கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் நடந்த ஜி20 நிகழ்வின் போது காஷ்மீரின் அழகு, பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அனைவரும் அந்த இடத்தைப் பார்வையிட விரும்புகிறார்கள். இப்போது அனைவரும் காஷ்மீருக்கு வர விரும்புகிறார்கள். மாதா … Read more

காஷ்மீர் குறித்து முடிவு எடுக்க இந்தியாவுக்கு உரிமை இல்லை.! பாகிஸ்தான் கடும் அதிருப்தி.!

Pakistan say about Article 370

கடந்த 2019ஆம் ஆண்டு ஆளும் பாஜக அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை , காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் சட்ட … Read more

காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை.!

காஷ்மீர், ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் வருவதை ஒட்டி நேற்று காஷ்மீர் முழுக்க பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கட் செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

உருகும் பனிப்பாறைகள் முதல் மேக வெடிப்புகள் வரை – காஷ்மீரை பாதிக்கும்  காலநிலை மாற்றம்!!

காஷ்மீர் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் அசாதாரண வேகத்தில் உருகுவதால் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. காடழிப்பு மற்றும் வனச் சிதைவு புவி வெப்பமடைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வட இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் பகுதி முழுவதும், அதிகரித்து வரும் வெப்பநிலையால், பனிப்பாறைகள் உருகுதல் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிட்டது. அதே நேரத்தில் அடிக்கடி மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை மற்றும் வெள்ளப்பெருக்கும்  அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, … Read more

#Justnow:பரபரப்பு…15 கைத்துப்பாக்கிகள்;300 தோட்டாக்கள் – இரண்டு பயங்கரவாதிகள் கைது!

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வன்முறைகளும்,தீவிரவாத நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில்,காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள்,30 மெகசின்கள்,300 தோட்டாக்கள் மற்றும் 1 சைலன்சர் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. J&K | Two local hybrid terrorists of proscribed terror outfit LeT/TRF by Srinagar Police. … Read more

#BREAKING: காஷ்மீரில், நொய்டாவில் நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது. காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக காஷ்மீரில் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்த பொருட்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தான் -தஜிகிஜிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உணரப்பட்டது.  

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சண்டையில் முக்கியத்தளபதி உட்பட 3 தீவிரவாதிகள் பலி..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய தளபதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் டிஆர்எஃப் … Read more

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ராம்பாக் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர … Read more

ஜம்மு-காஷ்மீர்: மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ​​ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது … Read more

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு … Read more