கேரளாவில் கூட புயல் மீட்பு முழு வீச்சில் நடைபெற்றது!

கேரள மாநிலம் ஈடுபடக்கூடிய மீட்பு, நிவாரண பணிகளில் 10% பணிகளிலாவது தமிழ்நாடு அரசு ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க ஆளுநரிடம் மனு! !

புயல் பாதித்த கன்னியாகுமரியை, பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம், எதிர்க்கட்சி ஸ்டாலின் மனு.

குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது – ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா

நேற்று கொள்ளையர்கள் தேடுதல் வேட்டையில் எங்கள் போலீஸார் தமிழக தனிப்படைக்கு உதவி செய்தார்கள். எப்போதுமே எங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது – ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா

பெரியபாண்டியனை கொள்ளையன் நாதுராமே சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல்!

பெரியபாண்டியனின் துப்பாக்கியைப் பறித்து அவரையே சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள். ராம்புராவில் கொள்ளையன் நாதுராமை கைது செய்து வேனில் ஏற்றியபோது நடந்த பயங்கரம். பெரியபாண்டியனை கொள்ளையன் நாதுராமே சுட்டுக் கொன்றதாக முதல்கட்ட தகவல்.

பாலியல் – கொலை குற்றவாளி தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் செருப்பு வீசி தாக்குதல்!

பாலியல் – கொலை குற்றவாளி தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் செருப்பு வீசி தாக்குதல்!  ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் பிரசன்னா விலகினார்

அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார்!

கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார்  என அவரது மனைவி  பானு ரேகா உருக்கம்.

சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது, விஷாலின் முடிவு அதிர்ச்சி அளித்தது! பொன்வண்ணன்

தேர்தலில் விஷால் போட்டியிடுவது குறித்து, சங்க பொறுப்பாளர்களிடம் சொல்லவில்லை .சங்கம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது, விஷாலின் முடிவு அதிர்ச்சி அளித்தது – பொன்வண்ணன்.  நடிகர் சங்கம் மீதான விமர்சனத்தை ஏற்று, பதவியில் தொடர விரும்பவில்லை

விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது !பொன்வண்ணன்

அதிமுகவில் உள்ளவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜெயலலிதா கூறியிருந்தார் நடிகர் சங்கத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வரமாட்டோம் என ஏற்கனவே பதிவு செய்திருந்தோம் விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது -பொன்வண்ணன்

விஷால் தேர்தலில் இடைத்தேர்தலில் போட்டியிட  முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது! நடிகர் பொன்வண்ணன்..

நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் போது, அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவோம் என கூறி இருந்தோம் – நடிகர் பொன்வண்ணன். அரசியல் வேண்டாம் என சொல்லவில்லை.நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது தொடர்பாக நடிகர் பொன்வண்ணன் விளக்கம்.விஷால் தேர்தலில் இடைத்தேர்தலில் போட்டியிட  முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது. விஷால் தேர்தலில் நிற்பது தனிமனிதனின் உரிமை

ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை!

ஆர்.கே.நகரில் எத்தனை முறை தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெற போவதில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓகி புயலால் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி வருவதாக தெரிவித்தார். மேலும் எத்தனை முறை ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைத்தாலும் பாரதிய ஜனதா வெற்றிபெறாது என்றும், அந்த காலம் வரப்போவதில்லை எனவும் திருநாவுக்கரசர் விமர்சித்தார். இந்நிலையில், ஓகி புயலால் … Read more