ஆட்டோ டிரைவர்களின் பாதுகாப்பிற்கு உதவிய சூர்யா ஹீரோயின்.!

தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரனிதா. இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ்என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு  பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். 

இந்த நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர் வழங்கி உதவியுள்ளார். ஆம் ஆந்திர மாநிலத்தில் உள்ள 100 ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர், மாஸ்க் உட்பட இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் பாதுகாப்பாக, சுத்தமாக இருப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு, ஆட்டோவிற்கு கிருமிநாசினி தெளித்தும் உதவியுள்ளார். ஆட்டோகாரர்களின் நலனை கருத்தில் கொண்ட அவருக்கு அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் இவரது இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.