ரசிகர்கள் தேர்வு செய்த தலைப்பை புத்தாண்டில் வெளியிடவுள்ள 'சூர்யா37' படக்குழு!!

ரசிகர்கள் தேர்வு செய்த தலைப்பை புத்தாண்டில் வெளியிடவுள்ள 'சூர்யா37' படக்குழு!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரது நடிப்பில் தற்போது புதிய படமொன்று தயாராகி வருகிறது. இந்த படத்தை அயன், மாற்றான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர்.
இந்த படத்திற்கு காப்பான், மீட்பான், உயிர்கா எனும் மூன்று தலைப்பு தேர்வு செய்யப்பட்டு அதில் எந்த தலைப்பு வைக்கலாம் என படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் டிவிட்டரில் ரசிகய்களிடம் கருத்து கேட்டார். இதில் பலரும் தஙகள் விருப்பத்தை கூறினர்.
ரசிகர்கள் தேர்வு செய்த இந்த படத்தின் தலைப்பை புத்தாண்டில் வெளியிடுவோம் என படக்குழு அறிவித்துள்ளது. புத்தாண்டிற்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *