காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸே வெறும் துப்பாக்கிதான்! பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய சூர்யா!

சூர்யா நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா படத்தை பற்றியும்,  படகுழு பற்றியும் பேசி இருந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காந்தியை சுட்டு கொன்ற கோட்சே வெறும் துப்பாக்கி மட்டும் தான். என பெரியார் கூறியதை மேற்கோள் காட்டி குறிப்பிட்டார். ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னாடியும் ஒரு சித்தாந்தம் இருப்பதாக பெரியார் கூறியதை சுட்டிக்காட்டினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.