நடிகர் சூர்யா குடும்பம் நடிப்பது தவிர்த்து தங்களது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அறக்கட்டளை பங்களிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சூர்யா, ‘ தமிழ்நாட்டில் உள்ள 30 சதவீத அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்து வருகின்றனர். அவர்கள் எப்படி நீட் தேர்விற்கு தயார் ஆவார்கள். ‘ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘ அரசு பள்ளிகளை மூடினால், பல கிராமப்புறங்களின் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்படும்.’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.