வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்த சூர்யா-கார்த்தி!

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்த சூர்யா-கார்த்தி!

நடிகர் சூர்யாவும் கார்த்தியும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அகரம் பவுண்டேசன் மூலம் பல மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வருகின்றனர். இயற்கை பேரிடரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றனர்.

தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூர்,  நீலகிரி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில்  10 லட்சம் ரூபாயை சூர்யாவும் கார்த்தியும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இந்த நிதியுதவி ரசிகர்களை தாண்டி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube