#BREAKING : அயோத்தி வழக்கு ! நாளை தீர்ப்பு -உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
:
 
அயோத்தி வழக்கு விசாரணை 40 நாட்களுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதனையடுத்து அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு  விரைவில் வரும்  என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.