உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க வேண்டும் ! மக்களவையில் எம்.பி.ரவிக்குமார் நோட்டீஸ்

விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க கோரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்றை மக்களவையில் அளித்துள்ளார்.

விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் வெளியிட்ட அறிவிப்பில்,உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்க கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரக்கோரி மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளேன்.மேலும்  வெளிய கவன ஈர்ப்புத் தீர்மானம் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் செம்மொழியான தமிழ் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி என்றும் தெரிவித்துள்ளார்.