உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது – மு.க. ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது – மு.க. ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
மாகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றபோது ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும்  சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.


இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில்,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Join our channel google news Youtube