கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து!உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து!உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது.

இதனால் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால்  மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.அதில், கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *