உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மெருகூட்டுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.

தற்போது, இந்த பதிவில் இயற்கையான முறையில் உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி, சிவப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

செய்முறை

ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டையை பயன்படுத்தி, கேரட் ஜூஸை உதட்டின் மேலே தடவ வேண்டும். இவ்வாறு செய்து 20-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கி விடும்.

கேரட் ஜூஸில், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா – கரோட்டின், ஆண்டி – ஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் உள்ளதால், இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை சரிசெய்து, வெளியாவதற்கு உதவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.