ஒரே வாரத்தில் பளிச்சுனு வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்

ஒரே வாரத்தில் பளிச்சுனு வெள்ளையாக சூப்பர் டிப்ஸ்

  • முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்.

இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான  முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது.

Image result for முகக்கருமை

ஆனால், இன்று பலர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை அங்கி உபயோகித்து, பல பக்கவிளைவுகளை தாங்களே தேடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகக்கருமை நீங்கி பளிச்சுனு வெள்ளையாவதற்கான வழிகளை பற்றி பாப்போம்.

குங்குமப்பூ

Image result for குங்குமப்பூ

முகக்கருமை நீங்கி வெள்ளையாக நினைப்பவர்கள், குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் கூடுகிறது.

துளசி

Image result for துளசி

துளசி பல மருத்துவக் குணங்களைக் கொண்ட சிறந்த மூலிகை ஆகும். இது சரும பிரச்சனைகளை போக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசியை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முக கருமை நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் சருமப் பிரச்சனைகளை போக்காக கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சரும பிரச்சனைகளை நீக்கக் கூடிய தன்மை கொண்டது.

Image result for உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு காணப்படும்.

ஓட்ஸ்

Related image

சரும பொலிவை பெற விரும்புபவர்கள், ஓட்ஸை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலை அதனை அரைத்து, புளித்த தயிரினை அதனோடு சேர்த்து, தினமும் காலையில் அதனை முகத்தில் தடவி வந்தால் மிகக் கருமை நீங்கி பொலிவுடன் காணப்படும்.

பால்பவுடர்

Image result for பால்பவுடர்

மிகக் கருமையை போக்க விரும்புபவர்கள், பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் பொலிவை நாமே நம் கண்களால் காணலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *