சூப்பர் சிங்கர்ல நடந்த மாதிரி தான் பிக்பாஸ்லயும் நடந்திருக்கு! கொதித்தெழும் ஈழத்தமிழன்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மிகவும் சிறப்பாக விளையாடிய தர்சன் கண்டிப்பாக டைட்டில் வின்னர் ஆவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், இவரது வெளியேற்றம் பலரையும், பல கேள்விகளுக்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில், இலங்கையை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஜெஸிகாவுக்கு நடைபெற்ற மாதிரி தான், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்சனுக்கும் நடைபெற்றுள்ளதாக மிகவும் ஆவேசமாக சொல்கிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.