சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,53,616 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 963 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,40,633 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 9,946 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 3037 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Join our channel google news Youtube