சுனந்தா புஷ்கர் உடலில் 15 இடத்தில் காயங்கள்…!போலீசார் பரபரப்பு தகவல்…!

திருவனந்தபுரதத்தின் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில் சுனந்தா புஷ்கர் கணவர் சசி தரூரின்மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 -A மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் , 306 தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் ஆகிய இரு  பிரிவுகளில் குற்றம் சாற்றப்பட்டார்.ஆனால் சசி தரூரின் ஜாமீன் வாங்கியதால் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்க டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் டெல்லி போலீசார் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.இதில் டெல்லி காவல்துறை வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா வாதிட்டார்.

வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் , ” சுனந்தா புஷ்கர் விஷம் அருந்தி இறந்ததாக பிரேதபரிசோதனையில் கூறப்பட்டு உள்ளது.ஆனால் சுனந்தா புஷ்கர் உடலில் 15 காயங்கள் இருந்தது.மேலும் அவர் இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் மன வருத்தத்துடன் இருந்ததாகவும் வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா என கூறினார்.

author avatar
murugan