'நான்தான்டா இனிமேலு! வந்துநின்னா தர்பாரு!' ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கும் சும்மா கிழி பாடல் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. நயன்தாரா, யோகி பாபு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தினை அடுத்து இரண்டாவது முறையாக ரஜினி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான சும்மா கிலி எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு வருடங்களுக்குப்பிறகு சூப்பர் ஸ்டாரின் முதல் இன்று காலை முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் முழுதாக பாடியுள்ளார் என்பதால் இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாடலும் அமைந்துள்ளதால் தற்போது இணையதளத்தில் இப்படல் வைரலாக பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.