திடீர் திருப்பம்.! சிறுமி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர்.! டிஎன்ஏ சோதனையில் கண்டுபிடிப்பு.!

  • கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த  மார்ச் மாதம் 7 வயது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
  • தீர்ப்பு நாளை வெளியாக இருந்த நிலையில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் தெரியவந்து உள்ளது.

கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த  மார்ச் மாதம் 7 வயது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக  போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்தனர். செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால்  தீர்ப்பு நாளை வெளியாக இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக  சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் தெரியவந்து உள்ளது.

இதையெடுத்து சிறுமியின் தாய், தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார்.  இதனால்  நாளை வழங்க உள்ள தீர்ப்பு ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
murugan