biggboss 3: இவ்வளவு அழகான அனுபவமா? 50 நாட்களை கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட தர்சன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், கமல்ஹாசன், தர்சனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் அனுபவம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். தர்சன் இந்த கேள்விக்கு நெகிழ்ச்சியான பதிலினை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, அம்மா மற்றும் அப்பா இருவரும் பிள்ளைகளுக்காக தியாகம் செய்வதை படங்களில் தான் நான் பாத்துள்ளேன். ஆனால், அவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை வாழவில்லை என்றும், இப்ப எனக்கு ஆசையாக உள்ளது, எனக்கு ஏதாவது நல்ல விஷயம் நடந்தா, அவங்க அதை பக்கத்துல இருந்து பாக்கணும், அவங்ககிட்ட ஷேர் பண்ண வேண்டுமென்று எனக்கு தோணுது எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.