சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு ! ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற ஜெயகோபால்

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில்  சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு வாபஸ் பெற்றுள்ளனர்.பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்தது  சென்னை உயர் நீதிமன்றம்.