சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு ! ஜெயகோபால் ஆஜராகவில்லை

  •  பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். 
  • இந்த வழக்கில் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை சாலையில்  சுபஸ்ரீ சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் உயிரந்தார்.  இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில்  இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து போலீசார்  குற்றப்பத்திரிகையை தயாரித்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயகோபால் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.ஆனால்  ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விசாரணை 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது. நெஞ்சு வலி காரணமாக ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஆஜராக முடியவில்லை  என்று ஜெயகோபால் வழக்கறிஞர்  தெரிவித்தார்.