பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கு! குற்றம் சாட்டப்பட்ட ஜெயகோபாலுக்கு ஜாமீன்!

சென்னை பள்ளிக்கரணை சாலையில் இன்ஜினியரிங் பட்டதாரி சுபஸ்ரீ சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் உயிரந்தார்.  இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கவேண்டும் எனவும், அவர் மதுரையில் தங்கியிருந்து தினமும் அங்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.