3 ம் வகுப்பு படிக்கும் மாணவியின் உலக சாதனை – திருக்குறளில் படைத்த சாதனை

திருவண்ணாமலை வந்தவாசி அருகே அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மனைவி தர்ஷினி. 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக  சாதனை படைத்துள்ளார்.

கல்லாகுத்து கிராமத்தைச் சேர்ந்த ஆனைக்குட்டி – சத்யா தம்பதியின் மகள் தர்ஷினி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தர்சினி அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படிக்கிறார். சிறு வயதில் இருந்தே திருக்குறளில் அதிகம் நாட்டம் கொண்ட மாணவி அதில் சாதனை படைத்துள்ளார். ஒன்றாம் படிக்கும் பொது 1 நிமிடத்தில் 27 திருக்குறள் பாராமல் கூறி அனைவரையும் வியக்க வைத்தார். மாணவியின் திறமையை கண்டு ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்தி வந்தனர். இரண்டாம் வகுப்பு படிக்கையில் 4 நிமிடத்தில் 110 திருக்குறளை ஒப்புவித்து புதிய சாதனை படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முன்னிலையி நடந்த உலக சாதனையில், 4 நிமிடம் 49 வினாடிகளில் 150 க்கும் மேற்பட்ட குரல்களை ஒப்புவித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அவரது திறமையை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் தர்ஷினியின் குடும்பத்திற்கு பசுமை வீடு ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.