காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கா.? – செங்கோட்டையன்

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கா.? – செங்கோட்டையன்

10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும்.

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், 10 ஆம் வகுப்பு தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் 9.45 க்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை  www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுடன் 2 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube