கல்லூரி மாணவி கொலை வழக்கு:கைதான சதீஷ்குமாரை 15 நாள்  சிறையில் அடைக்க உத்தரவு

கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமாரை 15 நாள்  கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5 ஆம் தேதி)அன்று சொந்த ஊருக்கு செல்வதற்கு கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று சென்றுள்ளார் அந்த மாணவி.

ஆனால்  மாணவி அன்று இரவு ஊருக்கு வரவில்லை.இதனால் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் நேற்று காலை மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.இதன் பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.பின்னர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி என்னும் கிராமத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் காவல்த்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.அங்கு இருந்த சடலம் காணமல் போன தனியார் கல்லூரி மாணவி என்று தெரியவந்தது.மாணவியின் சடலம்  ஏப்ரல் 6 ஆம் தேதி மீட்கப்பட்டது. இதன் பின்னர் கோமங்கலம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 7 ஆம் தேதி) மாணவியின் கொலை வழக்கில் இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் கோவை சிறையில் அடைக்க பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment