மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் – விசாரணை தொடக்கம்

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக  விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் , இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்  மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக  விசாரணையை தொடங்கியது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் .இது தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.