நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் !பயோ மெட்ரிக் முறையில்தான் இனி மாணவர் சேர்க்கை-மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் !பயோ மெட்ரிக் முறையில்தான் இனி மாணவர் சேர்க்கை-மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

ஆள் மாறாட்டங்களை தடுக்க, பயோ மெட்ரிக் முறையில்தான் இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று  மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு  தெரிவித்துள்ளார்.

தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.விசாரணையும் நடைபெறும் வருகிறது.

இந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறுகையில்,கோவை மருத்துவ மாணவர்களின் புகைப்படங்களில் சிறு வித்தியாசம் இருந்தது, தவறு ஏதும் நடக்கவில்லை.ஆள் மாறாட்டங்களை தடுக்க, பயோ மெட்ரிக் முறையில்தான் இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube