டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – தேனி மாவட்ட காவல்துறை.!

சமீபத்தில் கடும் எதிர்ப்பை மீறி மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை கண்டித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நாளை தேனியில் வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் கட்சி சார்பாக கே.எஸ்.அழகிரி தலைமையில் டிராக்டரில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டங்களில் டிராக்டரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பஞ்சாபில் டிராக்டர் போரட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan