ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்..!இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான்…! அன்புமணி ராமதாஸ் 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் வென்றிருக்கிறது என்று  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு எவ்வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை.இந்தத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக ஆட்சியாளர்கள் உளப்பூர்வமாக நினைக்கவில்லை .
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் வென்றிருக்கிறது; தமிழக அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது. இதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment