புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை – முதல்வர் நாராயணசாமி

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 2020-21ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மூன்று மாத செலவினங்களுக்கான கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது தெடார்பாக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்